கிருஷ்ணகிரி, மார்ச் 6: திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது செய்யப்பட்டார். ஊத்தங்கரை தாலுகா ஆண்டியூர் குறிஞ்சித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்திரபிரகாஷ் (20). இவர் மீது ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல் என 4 வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளின் கீழ் சந்திரபிரகாஷ் கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சந்திரபிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பண்டிகங்காதர், கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையினை ஏற்ற கலெக்டர் பிரபாகர், சந்திரபிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் சந்திரபிரகாசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.