கிருஷ்ணகிரி, மார்ச் 6: சரவணா ஹார்டுவேர்ஸ் நிறுவனத்திற்கு சிறந்த விற்பனையாளர் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் சரவணா ஹார்டுவேர்ஸ் நிறுவனத்திற்கு, சிறந்த விற்பனையாளர் விருதினை நிறுவனர் சரவணபாபுவுக்கு, செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 4 மாவட்டங்களில் செட்டிநாடு சிமெண்ட் விற்பனையில் 3வது இடத்தை பெற்ற சரவணா ஹார்டுவேர்ஸ் நிறுவனர் சரவணபாபுக்கு, சென்னையில் நடைப்பெற்ற விழாவில் செட்டிநாடு சிமெண்ட் முதன்மை விற்பனை மேலாளர் ஆர்.பி.சிங், பொதுமேலாளர் அனில்குமார், சீனியர் மார்க்கெட்டிங் மேலாளர் சதீஸ்குமார், சீனியர் விற்பனை அதிகாரி சுரேஷ்குமார், பூபாலன் ஆகியோர் சிறந்த விற்பனையாளருக்கான விருதினை வழங்கினர். விருதை பெற்ற சரவணபாபுவை, நிறுவன மேலாளர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.