×

கடத்தூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

கடத்தூர், மார்ச் 6: கடத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிந்தல்பாடி, புட்டிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஆகிய சாலைகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளாலும், அந்த கடைகளுக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்வதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shops ,Kadathur ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி