×

செல்லியம்பட்டியில் பயன்பாட்டுக்கு வருமா சுகாதார வளாகம்?

சிங்கம்புணரி, மார்ச் 6:  சிங்கம்புணரி அருகே முடங்கிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி ஊராட்சியில் கடந்த 2011-12ம் ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 6 கழிப்பறை, 4 குளியலறை வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இவ்வளாகத்தில் அப்பகுதி மக்கள் குளிக்கவும், இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்தி வந்தனர். இந்த சுகாதார வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி கதவுகள் உடைந்து தண்ணீரின்றி வீணாகியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் திறந்த வெளிகளைப் பயன்படுத்துவதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
 இதே போல் பல்வேறு இடங்களில் சுகாதார வளாகம் பயனின்றி உள்ளது. இதை பராமரிப்பு செய்ய ஒன்றிய நிர்வாகம் குறைந்த நிதி ஒதுக்குவதால் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாமல் கிடப்பிலேயே உள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Health Campus ,
× RELATED மருதங்காவெளி அய்யாநகர் பகுதியில்...