×

முன்விரோத தகராறில் மோதல்

பண்ருட்டி, மார்ச் 6: பண்ருட்டி அருகே பெரிய புறங்கணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் அய்யப்பன்(37). இவரது உறவினர் கமலநாதன் மகன் கருணாகரன்(26). இருவருக்கும் வீட்டுமனை பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அய்யப்பனின் அண்ணன் முத்துவேல் மீது கருணாகரன் தரப்பினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று காலை அய்யப்பன் தனது அக்கா வீட்டுக்கு செல்வதற்காக கருணாகரன் வீட்டின் வழியாக நடந்து சென்றார். அப்போது நின்று கொண்டிருந்த கருணாகரன், அய்யப்பனை பார்த்து அசிங்கமாக திட்டி உள்ளார். இதில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருணாகரன், உறவினர் கமலநாதன், இவரது மனைவி இந்திரா ஆகியோர் அசிங்கமாக திட்டி அய்யப்பனை இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பதிலுக்கு இவர்கள் தாக்கியதில் இந்திராவின் கையில் காயம் ஏற்பட்டது.

Tags : Conflict ,
× RELATED மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல்