×

ஆட்டோவில் தனியாக சவாரி வந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்

உசிலம்பட்டி, மார்ச் 6: உசிலம்பட்டி அருகே உள்ள டி.அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42). ஆட்டோ டிரைவர். நேற்று இதே ஊரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து தொ.விலக்கு பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அம்பாசமுத்திரத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் அவரது உறவினர் மாணவியை தினந்தோறும் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி வரை உறவினர் வரவில்லை. இதனால் அந்த வழியாக வந்த ஜெயக்குமாரின் ஆட்டோவில் அருகில் இருந்தவர்கள் மாணவியை ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஊருக்கு செல்லும் வழியில் ஜெயக்குமார் இருட்டு பகுதியில் திடீரென ஆட்டோவை நிறுத்தினார்.

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து சத்தம் போட்டுக் கொண்டே ஓடினார். இதனை கண்ட ஜெயக்குமார் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஜெயக்குமாரின் உறவினர் காசிமாயன் என்பவரிடம் நியாயம் கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டு காசிமாயன் மாணவியின் தந்தையை அடித்து சட்டையை கிழித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அதன்பிறகு மாணவியின் தந்தை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சார்லசிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் மற்றும் காசி மாயனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...