×

உசிலம்பட்டி நகராட்சியில் தார்ச்சாலை பணிக்கு பூமிபூஜை

உசிலம்பட்டி, மார்ச் 6: உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தார்ச்சாலை மற்றும் பேவர்பிளாக் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 1, 4, 7, 12, 13, 14, 15, 18, 23 ஆகிய வார்டுகளில் தார்ச்சாலை மற்றும் பேவர்பிளாக் அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை நடந்தது. நீதிபதி எம்எல்ஏ பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில் வார்டு எண் 12 அய்யனார்கோவில் தெரு, வார்டு எண் 18 சொக்கர்செட்டியார் தெரு ஆகிய 2 தெருக்களில் பேவர்பிளாக் சாலையும், மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதன் மொத்த மதிப்பீடு ரூ. 1 கோடியே 24 லட்சம் ஆகும். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொ)அழகேஸ்வரி, அதிமுக நகர செயலாளர் பூமாராஜா, முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டி, ராமநாதன், கவுன்சிலர் உக்கிரபாண்டி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Earthquake ,municipality ,Usilampatti ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...