×

உசிலம்பட்டி கோயில்களில் சிவராத்திரி வசூல் எண்ணிக்கை

உசிலம்பட்டி, மார்ச் 6: உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள குலதெய்வ கோயில்களில் கடந்த மகா சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் கோவிலாங்குளம் பொன்னாங்கன்ஒச்சாண்டம்மன், கருமாத்தூர் கலியுக காசிவிஸ்வநாதன், விருமாண்டிபேச்சியம்மன், ஆரியபட்டி பெருமாள் ஆகிய கோவில்களில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்திய பணம் நேற்று எண்ணப்பட்டது. தாசில்தார் செந்தாமரை தலைமை வகித்தார். கோவில்நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அலுவலர்கள் பணம் மற்றும் நாணயங்களை எண்ணினர். எண்ணி முடிக்கப்பட்ட பணம் அந்தந்த கோவில் நிர்வாகக் கணக்கில் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

Tags : Shivaratri ,Usilampatti ,temples ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...