×

ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் மோதல்: 5 பேர் படுகாயம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 6: ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா பள்ளத்தூரை சேர்ந்தவர் உமாபதி (40). தொழிலதிபர். நேற்று இவர் தனது காரில் நண்பர் ரமேஷ்காந்த் (47) உடன் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு தாராபுரம் சென்று பின்பு பழநியை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பள்ளத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) ஓட்டி வந்தார். ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கொடைக்கானலை சேர்ந்த முனியப்பன் (28) ஓட்டி வந்த கார் அசுரவேகத்தில் இவர்கள் கார் மீது மோதியது. இந்த விபத்தில் உமாபதி காரில் வந்த டிரைவர் ராமகிருஷ்ணன், ரமேஷ்காந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். எதிரே வந்த காரில் டிரைவர் முனியப்பன், திருச்செல்வம (28), மேலும் ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிரைவர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Otanastram ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே...