×

கொரோனா பாதிப்பு எதிரொலி குன்னூரில் முக கவசங்களுடன் உலாவரும் சுற்றுலா பயணிகள்

குன்னூர், மார்ச் 6:  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்தபடியே பயணிக்கின்றனர். இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் அனைத்தும் இந்திய விமான நிலையங்களில் பலத்த மருத்து சோதனை பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், மாநில அரசுகள் சார்பில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய  சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி  முக கவசங்கள் அணிந்தபடியே பயணம் செய்தனர். மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Corona ,Coonoor ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...