×

செங்கம் பஸ் நிலையத்தில் கத்தியால் கேக் வெட்டி `பஸ் டே'கொண்டாட திட்டம் 2 பேர் கைது, மற்றொருவருக்கு வலை

செங்கம், மார்ச் 6: செங்கம் பஸ் நிலையத்தில் நேற்று கத்தியால் கேக் வெட்டி `பஸ் டே' கொண்டாட திட்டம் தீட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று, பயணிகள் அமரும் இடத்தில் கேக் மற்றும் கூரிய கத்தியுடன் 3 வாலிபர்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அந்த வாலிபர்களின் நடவடிக்கைகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்றதில் 2 பேர் பிடிபட்டனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தை சேர்ந்த விஜய்(22), தமிழரசன்(22) என்பதும், பஸ் நிலையத்தில் கத்தியால் கேக் வெட்டி `பஸ் டே' கொண்டாட திட்டமிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து செங்கம் சிறையில் அடைத்தார்.

Tags : bus station ,Chengam ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...