×

நெட்டியான்விளை வைகுண்டர் பதியில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா இன்று தொடங்குகிறது

மார்த்தாண்டம், மார்ச் 6: மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை அருகே நெட்டியான்விளையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் பதியில் 188வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 70வது ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 16ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 4 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வைகுண்டர் நாம ஜெபம், மாலை 5 மணிக்கு பணிவிடை, 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, இரவு 9.30 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது. 3ம் திருவிழாவான 8ம் தேதி காலை 8 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், 4ம் திருவிழாவான 9ம் தேதி இரவு 10 மணிக்கு வைகுண்டர் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 8ம் திருவிழாவான 13ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள்வைப்பு ஆகியவை நடைபெறுகிறது. . இதில் சிறப்பு விருந்தினராக சுவாமிதோப்பு பூஜிதகுரு லோக்பால பிரசாத் கலந்து கொள்கிறார்.

10ம் திருவிழாவான 15ம் தேதி மதியம் 1 மணிக்கு அன்னதர்மம்மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை ஆகியவை நடக்கிறது.  11ம் நாள் திருவிழா 16ம் தேதி மாலை 5 மணிக்கு சங்குநாதம் முழங்க, சிங்காரிமேளம் ஒலிக்க, முத்துக்குடை அணிவகுக்க அய்யா இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பவனி நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் பதியிலிருந்து புறப்பட்டு மாமூட்டுக்கடை, முண்டவிளை, கீழ்விளை, இடவிளாகம்  பத்ரகாளி அம்மன் கோயில், பங்காணிவிளை, கோணம், இறஞ்சிலி வழியாக அய்யா வைகுண்டர் திருப்பதியில் வந்து சேரும். இரவு பள்ளியுணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags : Ayya Vaikundar Avatar Day Celebration ,
× RELATED அய்யா வைகுண்டர் அவதார தின விழா