×

மேல ஆழ்வார்தோப்பில் பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கல்

வைகுண்டம், மார்ச் 6:  தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் நடந்தது. கிராம உதயம் இயக்குநர் சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட துணை இயக்குநர் விநாயக சுப்பிரமணியம், வைகுண்டம் பிடிஓக்கள் சுப்பிரமணியன், நாகராஜன், ஆழ்வார்தோப்பு பஞ்சாயத்து தலைவர் அமுதா அருள்ராஜ், துணைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிப் பேசினார். விழாவில், கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், நிர்வாக பொறுப்பாளர் ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற பிடிஓ ராஜப்பா வெங்கடாச்சாரி, பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், முருகசெல்வி, பிரேமா, ஜெயபார்வதி மற்றும் அரசுத்துறையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். தன்னார்வ தொண்டர் வினோத் நன்றி கூறினார்.

Tags : Women ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ