×

வைகுண்டம் பழைய பாலம் கல்தூண்களில் அரசமர செடி, கொடிகள் அகற்றம்

வைகுண்டம், மார்ச் 6: வைகுண்டத்தில்  உள்ள அணையுடன் கூடிய பழைய பாலம் கல்தூண்களில் அடர்ந்து வளர்ந்து வந்த  அரசமர செடிகள் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன.  வைகுண்டம்  பழைய பாலத்தின் கல்தூண்களிலும் புதிய பாலத்திலும் அரசமர செடிகள் அதிக  அளவில் அடர்ந்து வளர்ந்து வந்தன. இதனால் அணையுடன் கூடிய பழைய பாலம் மற்றும்  புதுப்பாலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என  வியாபாரிகள் சங்கத்தினரும், பாஜகவினரும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர். பாலங்களில் அரசமர செடிகளை அகற்றும் பணி  நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்டது எனவும், பொதுப் பணித்துறையினருக்குட்பட்டது  எனவும் இருவேறு துறையினரும் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில்,  இரண்டு பாலங்களிலும் வளர்ந்து வந்த அரசமர செடிகளின் புகைப்படங்கள் தினகரனில் வெளியானது. இதே போல் சமூக  வலைத்தளங்களில் வெளியாகியது. இதையடுத்து அணையுடன் கூடிய பழைய பாலத்தில்  அடர்ந்து வளர்ந்து வந்த அரசமர செடிகளை பொதுப்பணித்துறை பணியாளர்கள் அவசர  அவசரமாக அகற்றினர். இதேபோல் புதுப்பாலத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளையும்  அகற்ற வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...