×

தூத்துக்குடியில் மின் ஊழியர்கள் தர்ணா

நாசரேத், மார்ச் 6: நாசரேத் நைட்டிங்கேல் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு கலாசார கண்காட்சி நடந்தது.  தலைமை வகித்த எஸ்.டி.ஏ. சபை போதகர் குருசையா, ஜெபித்து கண்காட்சியைத் துவக்கிவைத்தார். பாரம்பரிய பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கிராமிய உணவு வகைகள் ஆகியன கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு வியந்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளித் தாளாளர் பேரின்பராஜ் லாசரஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஞானசீலி ஜான்சன் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.               

Tags : Tuticorin Electrical ,Darna ,
× RELATED கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4...