×

மதிமுக பொறுப்பாளருக்கு உவரியில் பாராட்டு விழா

திசையன்விளை, மார்ச் 6: மதிமுக நெல்லை புறநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ரைமண்டுக்கு உவரியில் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என பிரிந்த நிலையில் நெல்லை புறநகர் மாவட்ட பொறுப்பாளராக உவரி ரைமண்ட் நியமிக்கப்படுவதாக மதிமுக ெபாதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதனை தொடர்ந்து உவரி அந்தோனியார் கோயில் நிர்வாக குழுவினர், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ரைமண்டுக்கு பாராட்டு விழா நடந்தது. மதிமுக தென்காசி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியை இன்பவேணி வரவேற்றார். மதிமுக ஒன்றிய செயலாளர் சற்குணராஜ், திசையன்விளை நகர செயலாளர் பிரபுமுருகன், கள்ளிகுளம் கென்னடி, களியல் அந்தோனிசாமி, பஞ். முன்னாள் தலைவர் அந்தோனி, அம்பை முத்துசாமி, மீனவரணி சேவியர் டி.குரூஸ் வாழ்த்தி பேசினர். கொர்னலியுஸ் நன்றி கூறினார்.

Tags : Uvari ,appreciation ceremony ,
× RELATED ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற...