×

அத்தியூரில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தடுப்பு சுவர் அகற்றம்

ரிஷிவந்தியம், மார்ச். 5:   ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் செட்டியார் தெற்கு தெரு உள்ளது. இத்தெருவை ஆக்கிரமித்து குப்புசாமி என்பவர் தடுப்பு சுவர் கட்டியுள்ளார். இதனை அகற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சிவக்குமார் என்பவர் மனு அனுப்பினார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் சங்கராபுரம் நில அளவர் ஆர்த்தி அளவீடு செய்தார். அப்போது தடுப்புச்சுவர் ஆக்கிரமிப்பில் உள்ளதை உறுதிசெய்தார். அதைத்தொடர்ந்து அரியலூர் குறுவட்ட ஆய்வாளர் தனசேகர், கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, ரிஷிவந்தியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி, பகண்டை கூட்டுச்சாலை உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், பச்சையப்பன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீரன், தனிப்படை பிரிவு காவலர் சுந்தர், ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தடுப்பு சுவர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Removal ,Atur ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!