×

கணவர் இறந்த துக்கத்தில் தீக்குளித்த மூதாட்டி சாவு

திருச்செந்தூர், மார்ச் 5: திருச்செந்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா (50). இவர்களது பராமரிப்பில் விஜயகுமாரின் தந்தை சக்திவேல், தாய் அற்புதம் (74) இருந்து வந்தனர்.

கடந்த 11 நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் சக்திவேல் இறந்தார். இதனால் தீராத துக்கத்தில் இருந்துவந்த அவரது மனைவி அற்புதம், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அற்புதம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,grandfather ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...