×

செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7ம் தேதி நடக்கிறது

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி செயின்ட் ஜோசப் கல்லூரியில், வரும் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து  கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக்  கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 7ம்  தேதி காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில்  நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில், வேலைநாடுநர்கள்  பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : internship camp ,St. Joseph's College ,
× RELATED செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள்...