×

மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி மீது தாக்குதல்

நாங்குநேரி, மார்ச் 5:  நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியைச் சேர்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணமூர்த்தி(25). இவருக்கும் இவரது உறவினரான பரப்பாடியை அடுத்த கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முருகானந்தம் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி சுப்புலட்சுமி உறவினர் சுபாஷ் ஆகியோருடன் சிவந்திப்பட்டியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

மூலைக்கரைப்பட்டி பெருமாள்நகர் விலக்கு அருகே வரும்போது அங்கு நின்ற முருகானந்தம் கிருஷ்ணமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கையால் தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் தலையில் போட முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே முருகானந்தம் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி சப்.இன்ஸ்பெக்டர் துரை, முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : attack ,corner ,
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு