களக்காடு, மார்ச் 5: களக்காடு எஸ்.ஐ.பழனி மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு களக்காடு கோட்டைகரை தெருவை சேர்ந்த தங்கையா மகன் அந்தோணி முத்து (45) என்பவர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.