×

கல்லிடைக்குறிச்சி அருகே ஸ்கூட்டி மீது டெம்போ மோதி 3 பெண்கள் படுகாயம்

அம்பை, மார்ச் 5:  கல்லிடைக்குறிச்சி அருகே துக்கம் விசாரித்து விட்டு திரும்பி வந்தபோது ஸ்கூட்டி மீது டெம்போ மோதியதில் தோழிகள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம் பேச்சிமுத்து மனைவி ராஜலெட்சுமி (32), பொன்மாநகர் மாரி செல்வம் மனைவி சரஸ்வதி (35), அயன் சிங்கம்பட்டி ஆறுமுக பெருமாள் மனைவி ஆறுமுகத்தம்மாள் (36). கல்லிடைக்குறிச்சி அருகே அடுத்தடுத்த பகுதியில் வசித்து வரும் இவர்கள் மூவரும் தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

மூவரும் பாப்பான்குளத்திற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு ஒரே ஸ்கூட்டியில் திரும்பி வந்தனர். கல்லிடைக்குறிச்சி - மணிமுத்தாறு சாலையை கடக்க முயன்ற போது  முதலியார்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்த டெம்போ ஸ்கூட்டி மீது மோதியது.   இதில் ஸ்கூட்டி ஓட்டி வந்த ஆறுமுகத்தம்மாள் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் அவர்களை மீட்டு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : girls ,Kalidaikurichi ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே