×

களக்காடு அருகே விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை

களக்காடு, மார்ச் 5: களக்காடு அருகே விவசாயியை தாக்கிய தந்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (72). சம்பவத்தன்று இவர் வீட்டு அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் குடிநீர் குழாயில் இருந்து மற்றொரு குழாய் மூலம் மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ராமச்சந்திரன் தட்டிக் கேட்டார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அய்யாதுரை, அவரது மகன் கண்ணன் ஆகியோர் ராமச்சந்திரனை மண்வெட்டி கனையால் தாக்கினர். இதனால் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யாத்துரை, அவரது மகன் கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Kalakkad ,
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...