×

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை சேலம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 5:பொம்மிடி தென்னக ரயில்வே பணியாளர்கள் சங்கம், மத்திய அரசுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் ரயில்வே கோட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், சேலம் - சென்னை செல்லும் ரயில் ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. ஆகையால் மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் வரை வந்து, பல மணி நேரம் நின்று அதிகாலை சென்னை புறப்பட்டு செல்லும்  ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை, சேலம் வரை நீட்டித்து அதிகாலை சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றால், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பொம்மிடி, கிருஷ்ணகிரி, அரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வேலைக்கு செல்பவர்கள் ஆகியோர் பயனடைவார்கள். எனவே, ஏலகிரி எக்ஸபிரஸ் ரயிலை, பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Yelagiri ,Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...