காரிமங்கலம், மார்ச் 5: காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி, வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி (37). இவர் நேற்று முன்தினம் இரவு, சொந்த வேலையாக காரிமங்கலத்திற்கு டூவீலரில் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரிமங்கலம்- மொரப்பூர் சாலையில் டாஸ்மாக் கடை அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.