×

பிஸ்கெட் கம்பெனியில் கைவரிசை: 4 பேர் கைது

திருச்சி, மார்ச் 5: திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பிராட்டியூர் துணை மின்நிலையத்திற்கு எதிரே பிஸ்கட் கம்பெணி செயல்படுகிறது. இந்த கம்பெனியில் இருந்து பிஸ்கட் ஏற்றி நின்று கொண்டிருந்த வேனில் இருந்து கடந்த 1ம் தேதி மர்ம நபர்கள் பயணிகள் ஆட்டோவில் வந்து திருடி, அதனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருடர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோ டிரைவர் ஆட்ேடாவை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் அவர் பொதுமக்களிடம் பிடிபட்டார். இது குறித்த தகவலையடுத்து எல்லை பிரச்னையை முடித்துக்கொண்டு அங்கு வந்த எ.புதூர் போலீசார் ஆட்டோவை கைப்பற்றி, டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதையடுத்து ராம்ஜிநகர் மில்காலனி மாரியம்மன் கோயில் தெரு பாலு(எ)பூபாலன்(26), மில் காலனியை சேர்ந்த அபிமன்யு (19), புங்கனூர் காந்திநகர் ஹரிஹரன் (24) மற்றும் சூரியா (எ) லட்சுமணன் (22) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : Biscuit Company ,
× RELATED கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்...