×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, மார்ச் 5: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (6ம்தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை படித்தவர்கள்,

18 முதல் 35வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வாய்ப்பினை தவறவிடாமல நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சி என்ற முகவரியில் நேரில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Private Sector Employment Camp ,
× RELATED சென்னையில் மாபெரும் தனியார் துறை...