×

திருச்சியில் நாளை நடக்கிறது திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி

திருச்சி, மார்ச் 5: மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் வரும் 7ம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் கிளப், தனியார், பொது நிறுவன அணி வீரர்கள் திருச்சி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். அணியின் குருப் போட்டோ கொண்டு வருதல் வேண்டும். முதல் போட்டியின்போது தங்கள் அணியின் 16 வீரர்கள் பெயர்களை கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டியில் சீருடை நம்பருடன் கலந்துகொள்ள வேண்டும். நுழைவு விண்ணப்பத்தில் வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி, கிளப் முகவரி மற்றும் வீட்டு முகவரியுடன் அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் அணியினை நிறுத்தவோ, நீக்கவோ நிர்வாக கமிட்டியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. வெற்றி பெறும் அணி மண்டல அளவிலான வளைகோல்பந்து போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

போட்டிகள் இந்திய வளைகோல்பந்து கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும். நுழைவு விண்ணப்பத்தினை நாளை (6ம் தேதி) மாலைக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம் அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : curriculum league tournament ,Trichy Anna Stadium ,
× RELATED திருச்சி அண்ணா ஸ்டேடியம் நீச்சல் குளம் திறப்பு