×

திருவில்லிபுத்தூரில் போலீஸ்காரர் வீட்டிற்குள் புகுந்து முகமூடி கொள்ளை ஆசிரியை வீட்டிலும் திருட முயற்சி

திருவில்லிபுத்தூர்,  மார்ச் 5: திருவில்லிபுத்தூர்  இந்திராநகரில் வசித்து வருபவர் முருகன்(34). இவர் விருதுநகரில் உள்ள எஸ்பி  அலுவலகத்தில் தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர்  மார்ச் 2ம் தேதி  இரவு விருதுநகர் பணிக்காக சென்றுவிட்டார் 3ம் தேதி காலை  இவர் வீடு திறந்து கிடந்ததை  அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக  முருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸ்காரர்  ஜெயமுருகன் வீட்டில் இருந்து பார்த்தபோது 13 பவுன் நகை  கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்ந்து நகர் காவல் நிலையத்தில்  அவர் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் நகர் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் போலீஸ்காரர் வீட்டிற்கு அருகே ஆசிரியை  வீட்டிலும் கொள்ளையன் கைவரிசை காட்ட முயன்ற சம்பவம் தெரிய வந்துள்ளது.   முருகன் வீட்டின் அருகிலேயே ஆசிரியை வீடு உள்ளது.

Tags : policeman ,house ,robber ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்