×

கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக உட்கட்சி தேர்தல் வேட்புமனு

வருஷநாடு, மார்ச் 5: கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் திமுக உட்கட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. இதில் திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசினார். மாநில திமுக தலைமைக் கழகப் பிரதிநிதி மஸ்தான் தேர்தல் நடத்தும் முறை பற்றியும் சிறப்பாக பேசினார். இந்நிலையில் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் அனைவரிடமும் வேட்பு மனுவை வாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்எல்ஏ மூக்கையா, முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கடமலை மயிலை ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு சம்பந்தமான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
'
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன், மயிலாடும்பாறை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தேசிங்குராஜன், ஊராட்சி செயலாளர்கள் தென்னரசு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மணி, முருகன், ஜெயச்சந்திரன், ஆனந்தன், கிளைக் கழக நிர்வாகிகள் செந்தில், லட்சுமணன், செல்வம், கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் பிரிவு அண்ணாநிதி, சுகுமார், முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், மச்சக்காளை, கவிதா துரைப்பாண்டி, முன்னாள் வீட்டுவசதி வாரிய தலைவர் ஜெயபால் மாவட்ட பிரதிநிதி எம்எஸ் மாடசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி மாடசாமி ஒன்றிய வர்த்தக அணி சக்திவேல், ஒன்றிய மாணவரணி சரவணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ‘திமுக கட்சி என்பது தமிழகத்தில் ஒரு மாபெரும் எக்கு கோட்டை இதை யாராலும் அழிக்க முடியாது. வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கட்சி அமோக வெற்றி பெறும். எனவே திமுக கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுகூடி முறையான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கு நம்முடைய கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நம்மோடு நிற்பார்’ என்றார்.

Tags : DMK ,candidate ,UDF ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...