×

டூவீலர் மீது கார் மோதி விபத்து

தேனி, மார்ச் 5: தேனி அருகே தாடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சின்னக்கண்ணன் (33). இவரும், தேனி அருகே கொடுவிலார்படடியைச் சேர்ந்த ராஜ் மகன் ஈஸ்வரன் (41) என்பவரும் நேற்று முன்தினம் ரெங்கபுரத்தில் இருந்து தேனி நோக்கி டூவீலரில் சென்றனர். மோட்டார் சைக்கிள் நாகலாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று சின்னக்கண்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் சின்னக்கண்ணன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சின்னக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி