×

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு சவப்பெட்டியை வைத்து ேபாராட்டம்

கீழக்கரை, மார்ச் 5: கீழக்கரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியுடன் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் பெண்கள் உள்பட பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டிக்கும் வகையில் இறந்தவர்கள் உடல்களை எடுத்து செல்லும் பெட்டியை சாலையில் வைத்து அதில் போர்வையால் மூடப்பட்டு வாசகங்கள் எழுதப்பட்டது.

உடலை எடுத்து செல்லும் பெட்டி சாலையில் வைக்கப்பட்டிருந்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. ஏதேனு விபரீதம் நடைபெற்று விட்டதோ என்று நினைக்கும் வகையில் இருந்தததால் உடன் அப்பகுதியில் உள்ள போலீசார் அகற்ற கோரினர். இதனையடுத்து அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.

Tags : Protests ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...