×

சாயல்குடி அருகே வேன் மீது டிராக்டர் மோதல் 10 மாணவர்கள் காயம்

சாயல்குடி, மார்ச் 5: சாயல்குடி அருகே பள்ளி வேன் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.கடலாடி அருகே கே.கருங்குளத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி வேன் நேற்று காலையில் ஒப்பிலான், மாரியூர் பகுதியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கருங்குளம் பள்ளிக்கு வந்துள்ளது. அப்போது மலட்டாறு பகுதியிலிருந்து வாகன எண் இல்லாத டிராக்டர் ஒன்று வேகமாக பள்ளி வேன் மீது மோதியது.

இதில் வேன் சேதமடைந்தது. வேனில் வந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு மாணவணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களுக்கு கடலாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் சிகிச்சையளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் வாகனங்களை விடுவித்தது பெற்றோர் மத்தியில் சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sayalgudi ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் பீடி இலைகள் பறிமுதல்