×

வைகை வடிநில பணிகள் கூட்டம்

சிவகங்கை, மார்ச் 5: சிவகங்கையில் வைகை வடிநில வட்டம் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிவகங்கை வைகை வடிநில வட்டம் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 2019-2020ம் நிதி ஆண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்காமல் உள்ள நிலுவைப் பணிகள் குறித்த கூர்ந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

சிறப்புத் தலைமைப் பொறியாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் நிலுவையில் உள்ள பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். 2020-2021ம் நிதியாண்டிற்கு செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த அரசு ஆணை இன்னும் சில நாட்களில் வர உள்ளது குறித்தும், அப்பணிகளை செயல்படுத்தும் விபரம் குறித்தும் விளக்கப்பட்டது.

வெளிப்படைத் தன்மையுடன் விதிகளுக்கு உட்பட்டு பாசன சங்கங்கள் அமைத்து அச்சங்கங்கள் வாயிலாக பணிகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் கீழ்வைகை வடிநில வட்டம் சிவகங்கை சார்ந்த செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vaigai Structural Works Meeting ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை