×

மன்னார்குடியில் வேலையின்மைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, மார்ச் 5: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற வேலையின்மைக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 96 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வேலை வழங்கிட அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனை கண்டித்தும், அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த கையெழுத்து இயக்கத்தை 200 இடங்களில் நடத்திட முடிவு செய்யப்பட்டு மன்னார்குடி கீழப்பாலம் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் தலைமையிலும், ஒன்றிய தலைவர் பழனிவேல் முன்னிலையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், வணிகர் நல சங்க தலைவர் பாரதிதாசன் ஆகியோர் பேசினர்.

Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...