×

வணிக நிறுவனம், கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி ஊர்வலம்

மதுரை, மார்ச் 5: தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மதுரையில் நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விசயராகவன் தலைமையில் பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கடைகள், தொழிற்சாலைகள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய வேண்டும் என்ற பெயர் பலகைகளை மாணவர்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தமிழ் சங்க கட்டிடம் முன்பு துவங்கிய ஊர்வலம், கேகேநகர், ஆவின் சந்திப்பு, காந்திமியூசியம் வழியாக திரும்பவும் தமிழ்சங்க கட்டிடத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் அதிகாரிகள், சிறுவர்களான பள்ளி மாணவர்களை அழைத்து வந்து நடக்க வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறும்போது, ‘வணிக நிறுவனத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஊர்வலம் நடந்திருக்கிறது. சிறுவர்களான மாணவர்களை நீண்ட தூரம் நடக்க வைத்திருக்கக் கூடாது. இந்த ஊர்வலத்தில் மாணவர்களுக்கு பதில், அதிகளவில் வணிக நிறுவனத்தினரை பங்கேற்பு செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...