×

பேரையூர் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி மற்றொரு வாலிபர் படுகாயம்

பேரையூர், மார்ச் 5: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே நடந்த டூவீலர் விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார்.
சிவகாசி தாலுகா, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சந்துரு(20). இதே ஊரைச்சேர்ந்த பரசிவம் மகன் கார்த்தீஸ்வரன்(21). இவர்கள் இருவரும் டூவீலரில் விஸ்வநத்தத்திலிருந்து எழுமலை அருகேயுள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

பேரையூர் அருகே உசிலம்பட்டி சாலை பி.தொட்டியபட்டி பஸ் நிறுத்தம் ஆஞ்சநேயர்கோவில் அருகே வந்தபோது, எதிரே சென்ற வாகனம் திடீரென திரும்பியதால் டூவீலரை நிறுத்த முற்பட்டபோது, இருவரும் தூக்கிவீசப்பட்டனர். அப்போது சாலையோரத்திலிருந்த மைல்கல் மீது சந்துரு மோதியதில் தலையில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கார்த்தீஸ்வரனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இந்த விபத்து குறித்து பேரையூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags : accident ,Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது