பழநி, மார்ச் 5: சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பழநி மாணவன் ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச மனிதநேய பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் பழநியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் ஆறுமுகம் முதல் பரிசு பெற்றார்.
மேலும் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற ஆறுமுகத்தை அவரது பெற்றோர், பயிற்சியாளர் என பலர் பாராட்டி வாழ்த்தினர்.