×

பேராவூரணி அருகே தீவிபத்து 20 ஏக்கர் கரும்புகள் கருகியது

பேராவூரணி, மார்ச் 5: பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன். இவர் தனக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். தற்போது கரும்பு பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கரும்பு கொல்லையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 21 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிர் தீயில் கருகி நாசமானது. மேலும் அடுத்தடுத்த வயல்களுக்கு தீ பரவியது. இந்த தகவல் கிடைத்ததும் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கரும்பு கொல்லையை பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்படாமல் மீதமுள்ள கரும்புகளை வெட்டி அரவை ஆலைக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Tags : Peravurani ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்