புதுக்கோட்டை, மார்ச்.5: காவிரிபடுகை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்தரஜித், பொருளாளர் பெருமாள், தேசிய குழு உறுப்பினர் மாதவன், மாநில துணைசெயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், வேளாண்மண்டல அதிகார அமைப்பில் விவசாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தம் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மாநில அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலங்குடி போக்குவரத்து பணிமனையில் பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் நாளடைவில் படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.