×

947 பேர் ஆப்சென்ட் மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்

அறந்தாங்கி, மார்ச் 5: மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்னம் பாலைகள் குடங்களில் வைத்து தூக்கி சென்று வீரமாகாளியம்மன் கோயிலை சுற்றி வழிபட்டனர்..
அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல், முளைப்பாரிக்கு விதை பாவுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கிராம பொது மக்களால் நடத்தப்பட்ட முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் நவதாணிய விதைகள் தூவி துளிர் விட்டுள்ள இளம் பயிர்களை அலங்கரித்து தூக்கி சென்று மண்ணடித்திடல் என்ற இடத்தில் ஒன்று சோ்ந்து ஊர்வலமாகச் சென்று குளத்தில் கொட்டிச் சென்றனர்.

தொடர்ந்து குதிரை எடுப்புத் திருவிழா மற்றும் பாட்ட கோயில் கல்பொங்கல் திருவிழாவும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு திருவிழா கிராம பொது மக்களால் நேற்று நடத்தப்பட்டது. மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில் தென்னம் பாலைகளை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க விண்ணதிரும் வானவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடித்திடல் சென்று அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக காவிரிக் கரையோர வீரமாகாளியம்மன் கோயிலுக்கு தூக்கி சென்று கோயிலை சுற்றி வந்து அருகில் பாலைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் கொட்டிவிட்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் கிராம பொது மக்கள், விழாக் குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனா.

Tags : devotees ,venue ,festival ,Abenchakkunnaikkadu Veerakalyammana ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்