×

அன்னவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்தி வைப்பு


இலுப்பூர்,மார்ச் 5: அன்னவாசல் ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தல் 3 வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்னவாசல் ஒன்றியக்குழுவிற்கு 20 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதில் 10 திமுக , 9 அதிமுக மற்றும் 1 இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர். 2 முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று ஒன்றியக்குழு வின் ஒன்றிய குழு துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய குழு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை; உதவி திட்ட அலுவலர் சுருதி தேர்தலை நடத்தினார்.

நேற்றும் தேர்தல் நடத்த போதிய உறுப்பினாகள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து சிறிது நேரம் வருகை புரிந்து காத்திருந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர். இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Vice President ,election ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!