வேளச்சேரி, மார்ச் 5: வேளச்சேரி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேளச்சேரி 100 அடி சாலையில் சந்தேகப்படும்படி சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் பழைய குற்றவாளி பள்ளிக்கரணை, கர்மேல் தெருவை சேர்ந்த பவித்திரன் (24) என தெரிந்தது.
அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன் வேளச்சேரியில் ஜன்னல் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை கையில் இருந்த 6 கிராம் தங்க காப்புகளை திருடியதை ஒப்பு கொண்டார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.