கரூர், மார்ச் 5: திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி இல்ல திருமண வரவேற்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி-சித்ரா தம்பதியரின் மகன் சதீஷ்-சஞ்சனா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று கரூர் பைபாஸ்சாலை அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, ஈரோடு முத்துசாமி, திமுக கொறடா சக்கரபாணி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள்அமைச்சர் சின்னசாமி, வக்கீல் மணிராஜ், எம்எல்ஏக்கள் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, நந்தகுமார், எழிரசன், தடங்கம் சுப்பிரமணியன், செந்தில்குமார், கார்த்திக், சேலம் ராஜேந்திரன், குளித்தலை ராமர், டாக்டர் மாசிலாமணி, மூர்த்தி, எம்பிக்கள் கணேசமூர்த்தி, சண்முகசுந்தரம், சேலம் செல்வகணபதி, தொண்டர் அணி அமைப்பாளர் ஜிம்சிவா, இளைஞர்அணி அமைப்பாளர் இளவரசு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட திமுக மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அனைவரையும் பரணி கே.மணி குடும்பத்தினர் வரவேற்றனர்.