×

தனியார் நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்

கரூர், மார்ச் 5: தனியார் நிதிநிறுவனத்தில் முதலீட்டுத்தொகை கிடைக்காதவர்கள் புகார் அளிக்கலாம் என கரூர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர்-கோவை சாலை நிதி கேபிடல்ஸ், நவநிதி பைனான்ஸ், நவநிதி கிரிடிட், என்ற நிதி நிறுவனங்களின் மீது கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டுத்தொகை திரும்ப கிடைக்காதவர்கள் கரூர் மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவில் உடனே புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது என பொருளாதாரக் குற்றப்பிரிவு-2 கரூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Victims ,institution ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்