×

ஆண்டிப்பாளையம் அருகே அடையாளம் தெரியாதவர் மயங்கி விழுந்து சாவு

கரூர், மார்ச் 5: கரூர்-புலியூர் ஆண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திருச்சி-கரூர் சாலையில் இடதுபுறம் அடையாளம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்துபோன முதியவர் வேட்டி, சட்டை அணிந்துள்ளார். பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த நபர் குறித்து தகவலும் துப்பும் கிடைக்காததால் அவரை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனவே இறந்துபோனவர் பற்றி தெரிந்தவர்கள் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் தகவல் அளிக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது