×

காக்களூர் பூங்கா நகர் சாலையின் நடுவில் மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர், மார்ச் 5: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம்பூ தெருவில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, தெருவோரம் வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகரில் உள்ளது மாதுளம்பூ தெரு. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இத்தெருவின் நடுவில் இடையூறாக ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம்  சாலையின் நடுவில் இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி அவசர கோலத்தில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை பொருட்படுத்தாமல் மண்சாலை அமைத்து விட்டனர். சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

புதியதாக இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள்களில் வருவோர், இந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையின் நடுவே மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றுவதன் அவசியம் குறித்து கிராம மக்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும். இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு நாளும் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றி ஓரமாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,wreck ,road ,Kakaloor Park Nagar ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...