×

சாலையில் கழிவுநீர் தேக்கம்

ஊட்டி, மார்ச் 5:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அப்பர் பஜார் சாலை பகுதியில் கழிவு நீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டிற்குட்பட்ட கணபதி தியேட்டர் செல்லும் சாலையோரங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து பல நாட்களாக சாலையில் ஓடுகிறது. இந்த கழிவு நீர் சாலையில் ஓடுவது மட்டுமின்றி, மார்க்கெட் செல்லும் நடைபாதைகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால், நடைபாதையில் செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பயன் ஏதும் ஏற்படவில்லை. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம் அப்பர்பஜார் சாலையில் கழிவு நீர் ஓடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ேமலும், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாதாள சாக்கடை அளவை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி