×

பெயிண்டருக்கு கத்திக்குத்து

கோவை, மார்ச்.5:கோவை அடுத்த தொண்டாமுத்தூர் தாளியூர் காந்தி காலனியை சேர்ந்தவர் சூர்யா (23). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது சகோதரருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (29) என்பவர், சூர்யாவிடம் பணம் கேட்டார். அதற்கு சூர்யா மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக் ஆத்திரமடைந்து சூர்யாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த சூர்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Painter ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை