×

விதை ஆராய்ச்சி மையத்தில் தெலுங்கானா அமைச்சர்

ஆத்தூர், மார்ச் 4: ஆத்தூரில் உள்ள தனியார் விதை உற்பத்தி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தை தெலுங்கானா மாநில வேளாண் அமைச்சர் பார்வையிட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் விதை உற்பத்தி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு பயிர்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தை தெலுங்கானா மாநில வேளாண் அமைச்சர் நிரஞ்சன்ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர், மையத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் விதை நிறுவன குழுமத்தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தரமான விதை உற்பத்தி குறித்தும், பாதுகாப்பான அதிக மகசூலை வழங்கக் கூடிய விதைகளை உற்பத்தி செய்யும் உத்திகளையும் நேரில் பார்வையிட்டார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

Tags : Telangana Minister ,Seed Research Center ,
× RELATED மோடி நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே...